Published : 16 Oct 2018 05:49 PM
Last Updated : 16 Oct 2018 05:49 PM
சீனாவில் இன்று காலை வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு நகரங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக ஜினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வடமேற்குப் பகுதியான ஜிங்கே கவுண்டியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழம் கொண்டிருந்தது. ஜிங்கே கவுண்டி பகுதியில் 50 கிலோ மீட்டருக்குள்ளாக பல்வேறு டவுன்ஷிப்களில் இந்நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். எனினும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வீடுகளில் தொங்கிக் கொண்டிருந்த மின்விளக்குகள் அதிர்வில் கடுமையான ஆட்டம் கண்டதாகவும் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாலும் வீடுகள் குலுங்கியதாலும் இப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சின்ஜியாங் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாகாணத்தில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புப் பணிகள் எதாவது தேவைப்பட்டால் உடனுக்குடன் செயல்படுவதற்காக நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT