ஆப்கன் அதிபர் மாளிகை மீது ராக்கெட்டை வீசி தாக்குதல்

ஆப்கன் அதிபர் மாளிகை மீது ராக்கெட்டை வீசி தாக்குதல்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை மீது நேற்று ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பக்ரீத் பண்டிகையையொட்டி அதிபர் அஷ்ரப் கனி அதிபர் மாளிகையில் இருந்து நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது அதிபர் மாளி கையை குறிவைத்து ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இது அதிபர் மாளிகை மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

இதைத் தொடர்ந்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது மற்றொரு ராக்கெட் வீசப்பட் டது. இது தூதரக வளாகத்தில் விழுந்து வெடித்தது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான் விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படையின் ஹெலிகாப்டர் கள் ராக்கெட் குண்டுகள் வீசப் பட்ட இடத்தை சுற்றி வளைத்து குண்டுகளை வீசின.

அதிபர் மாளிகை, அமெரிக்க தூதரகம் மீது வீசப்பட்ட ராக்கெட்டு களால் யாருக்கும் பாதிப்பு ஏற் படவில்லை. தலிபான் தீவிரவாதி கள் இந்த தாக்குதலை நடத் தியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறியபோது, “காபூலின் ஈத் கா மசூதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் குண்டுகளை வீசி அந்த வீட்டை தரைமட்டமாக்கிவிட் டோம். இதில் தீவிரவாதிகள் உயிரிழந்தார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து ஆப்கானிஸ் தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியபோது, “ராக்கெட் தாக்குதல் மூலம் ஆப்கானிஸ்தான் மக்களை வீழ்த்தி விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் தோல் வியைத் தழுவுவார்கள்” என்று தெரிவித்தார்.

பக்ரீத்தை ஒட்டி தலிபான் களுடன் சண்டை நிறுத்தம் கடைப் பிடிக்கப்படும் என்று அதிபர் அஷ்ரப் கனி அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சி யாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in