Published : 24 Aug 2014 12:58 PM
Last Updated : 24 Aug 2014 12:58 PM

12 ஆயிரம் ‘செல்ஃபிக்கள் கொண்ட தாய்லாந்து பெண்

உலகிலேயே அதிகம் ‘செல்ஃபி' படங்களைக் கொண்ட 'செஃல்பி ராணி' யார் தெரியுமா?

ஹாலிவுட்டின் கிம் கிர்திஷன் உள்ளிட்ட நடிகைக ளின் பெயர் களை எல்லாம் நீங்கள் சொன்னால் அது தவறு. இவர் ஒரு சாதாரணப் பெண்.

தாய்லாந்தில் வசிப்பவர் மார்தாவோ மோர்தார் (40). இவர் 'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளத்தில் தன்னைத் தானே எடுத்துக்கொண்ட 'செல்ஃபி' படங்களைப் பதிவேற்றும் வழக்கம் கொண்டவர். இதுவரை இவர் 12,000 'செல்ஃபி' படங்களை இந்த வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

பாங்காக்கில் உள்ள 'ரூம் ஆஃப் ஆர்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் தான் தன்னுடைய கணவர் என்று தன் வலைப் பக்கத்தில் குறிப்பிட் டிருக்கும் இவரை சுமார் 20,000 பேர் வலைதளம் மூலம் பின் தொடர்கிறார்கள்.

இவரின் எல்லா படங்களும் முகத்தை மட்டுமே காட்டுவன அல்ல. கால்களை மட்டுமே இவர் சில புகைப் படங்கள் எடுத்திருக்கிறார்.

தன்னுடைய குளியலறையில் உள்ள கண்ணாடி முன் நின்று படமெடுப்பதுதான் இவருக்கு மிகப் பிடிக்கும் என்றாலும், இவரின் புகைப்படங்கள் எதுவுமே ஆபாசமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x