Published : 01 Aug 2018 01:49 PM
Last Updated : 01 Aug 2018 01:49 PM

ஆப்கன் படையிடம் சரணடைந்த 150 ஐஎஸ் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் 150 ஐஎஸ் தீவிரவாதிகள்  அந்நாட்டு பாதுகாப்புப் படையிடம்  சரணடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் காமா ஊடகம், "ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவர் மவ்லவி ஹபிப் உர் ரஹ்மான் உள்ளிட்ட 150 ஐஎஸ் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை ஆப்கன் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் அவர்கள் ஆப்கன் படையிடம் ஒப்படைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகள் ஆப்கனில் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வலுவான தாக்குதலை நடத்தி வந்தனர். இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதன்காரணமாக ஐஎஸ்ஸுக்கு எதிராக அமெரிக்கப் படைகளும் தங்கள் தாக்குதலை அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்பினர் ஆப்கான் படையிடம் சரணடைந்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x