Last Updated : 26 Aug, 2018 09:04 AM

 

Published : 26 Aug 2018 09:04 AM
Last Updated : 26 Aug 2018 09:04 AM

காஷ்மீர் உட்பட எல்லா பிரச்சினைக்கும் பேச்சு மூலம் தீர்வு காண விருப்பம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி அழைப்பு

‘‘காஷ்மீர் உட்பட இந்தியாவுட னான எல்லா பிரச்சினைகளுக் கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது’’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம் ரான் கான் பதவியேற்ற பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியை நேற்றுமுன்தினம் சந்தித்து பல்வேறு முக்கிய விஷ யங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் வெளி யுறவுக் கொள்கைகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித் துள்ளனர். இதுகுறித்து குரேஷி நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

அண்டை நாடான இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. அத்துடன் காஷ்மீர் உட்பட எல்லா பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. டெல்லி அரசுடன் பேச்சு நடத்த எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதற்கு இருவரும் பங்கேற்க வேண்டும். ஒரு கையில் ஓசை எழுப்ப முடியாது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள உறவு ரகசியமானது அல்ல. இருதரப்பு அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை பார்க்க வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் உறவில் புரட்சி ஏற்படுவது குறித்து நான் பேசவில்லை. ஆனால் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுமா இல்லையா என்பதைப் பற்றி இப்போதைக்கு சிந்திக்க வேண்டாம். முதலில் இருதரப்பும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் குரேஷி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x