Published : 19 Aug 2014 03:12 PM
Last Updated : 19 Aug 2014 03:12 PM
ரஷ்யாவைச் சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர் தற்செயலாக தனது நிர்வாண செல்ஃபியை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, இதனை கண்டித்து அவரது பள்ளி நிர்வாகிகள் அவரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளது. ஆனால் நிர்வாக நெருக்கடிக்கு பணியாமல், அந்த ஆசிரியர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சமீபகாலமாக செல்பீ கலாச்சாரம் பரவலாக காணப்படுகிறது. செல்பி விபரீத செய்திகளும் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான இலினா கோர்னிஷோன்கோவா என்பவர் தனது நிர்வாண செல்பியை அப்லோட் செய்து பரபரப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
‘வ்கோடாக்’ என்ற ரஷ்ய சமூக வலைதளத்தில் தனது செல்பியை அவர் பதிவேற்றியுள்ளார். இதனை கவனித்த அப்பள்ளி மாணவர்களும், சக ஊழியர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து அந்த ஆசிரியர் தெரிவிக்கையில், இந்த நிர்வாணப் படத்தில் எதுவும் தவறுதலாக இல்லை என்றும், தான் மதிக்கத்தக்க விதமாகதான் வாழ்க்கை நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தபோது எடுக்கப்பட்ட இந்த படத்தை, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே தெரியும்படி பதிவேற்ற நினைத்ததாக அவர் கூறினார்.
ஆனால், அவரை வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் வேலையை ராஜினாமா செய்யும்படி அப்பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. அப்படி செய்யாவிடில், அவரை பணியிலிருந்து நீக்குவோம் என்றும் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT