ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ கமாண்டர்கள், அணுசக்தி விஞ்ஞானிகளின் உடல்களுக்கு ஈரானில் நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் இஸ்லாமிய புரட்சி சதுக்கத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். படம்: பிடிஐ
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ கமாண்டர்கள், அணுசக்தி விஞ்ஞானிகளின் உடல்களுக்கு ஈரானில் நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் இஸ்லாமிய புரட்சி சதுக்கத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் முக்​கிய​மான ராணுவ தளப​தி​கள், அணுசக்தி துறை​யில் ஈடு​பட்டு வந்த விஞ்​ஞானிகள் பலர் கொல்​லப்​பட்​டனர். இஸ்​ரேல் தாக்​குதலில் மேஜர் ஜெனரல் மொகம்​மது பஹெரி, கமாண்​டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்​ஞானி மொகம்​மது மெஹ்தி டெஹ்​ரான்சி உட்பட முக்​கிய நபர்​கள் பலர் உயி​ரிழந்​தனர்.

தற்​போது போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், உயி​ரிழந்த ராணுவ கமாண்​டர்​கள், விஞ்​ஞானிகளின் உடல்​களுக்கு நேற்று ஈரான் அரசு மரி​யாதை​யுடன் இறு​திச் சடங்கு நடை​பெற்​றது. தலைநகர் டெஹ்​ரானில் நேற்று காலை இறு​திச் சடங்கு ஊர்​வலம் நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பங்​கேற்​றனர். நாட்​டுக்​காக உயிர்த் தியாகம் செய்​தவர்​களை கவுரவிக்​கும் வகை​யில் ஊர்​வலம் நடை​பெற்​ற​தாக ஈரான் தொலைக்​காட்சி செய்தி வெளி​யிட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in