Published : 26 Aug 2014 10:00 AM
Last Updated : 26 Aug 2014 10:00 AM

காங்கோவுக்கும் பரவியது எபோலா

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவுக்கும் பரவியுள்ளது. நைஜீரியா, கினி, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸின் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த வைரஸால் இதுவரை 1427 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்ச லோடு உயிருக்குப் போராடி கொண்டிருக்கின்றனர்.

காங்கோவில் எபோலா வைரஸ்

இந்நிலையில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ மக்களாட்சி குடியரசு நாட்டிலும் எபோலா பரவியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் காணப்பட்ட 2 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இருவரும் எபோலா வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இருவருக் கும் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 13 பேர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

பிரிட்டிஷ்காரருக்கு எபோலா வைரஸ்

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சியர்ரா லியோன் நாட்டில் ஆண் செவிலியராகப் பணியாற்றினார். அவரது மருத்துவமனையில் எபோலா வைரஸால் பாதிக்கப் பட்ட நோயாளிகள் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலம் பிரிட்டிஷ் ஆண் செவிலியருக்கும் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ராணுவ விமானம் மூலம் அவர் லண்டனுக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜப்பானின் சோதனை மருந்து

எபோலா வைரஸை கட்டுப் படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் சோதனை மருந்தை கண்டுபிடித்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும் புதிய சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்தும் பாதிக்கப்பட்ட நாடுக ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது, அதனை அழிக்க ஓராண்டு காலம் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x