Published : 08 Aug 2014 11:05 AM
Last Updated : 08 Aug 2014 11:05 AM

ரஷ்ய அதிபர் புதின் செல்வாக்கு அதிகரிப்பு

ரஷ்யாவில் அந்நாட்டு அதிபர் புதினின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு 87 சதவீத ரஷ்யர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் மத்தியில் புதினின் செல்வாக்கு சரிந்திருந்தது. இந்நிலையில் இப்போது உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடுகள் காரணமாக அவரது செல்வாக்கு உள்நாட்டில் அதிகரித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைத் துக் கொண்டதும் அவருக்கு ஆதரவை பெற்றுத் தந்துள்ளது.

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் புதினின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. அப்போது ரஷ்யா ஜார்ஜியாவுடன் மோதலில் ஈடுபட்டிருந்தது. ரஷ்யாவை புதின் சரியான பாதையில் எடுத்துச் செல்கிறாரா என்பது தொடர்பாகவும் மக்க ளிடையே கருத்து கேட்கப்பட்டது. இதில் 66 சதவீதம் பேர் ரஷ்யா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், 19 சதவீதம் பேர் ரஷ்யா தவறான பாதையில் செல்கிறது என்றும் கூறியுள்ளனர்.

புதின் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகள் அவருக்கு எதிராக வந்துள்ளன. அந்நாட்டு மக்கள் மத்தியில் புதின் குறித்து எதிர்மறையான எண்ணம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x