Published : 16 Jun 2018 09:54 AM
Last Updated : 16 Jun 2018 09:54 AM

ஊழல் விவகாரத்தில் தென்கொரியாவில் உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கு சிறை

ஊழல் வழக்கில் சிக்கிய தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹைக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அதிபராக இருந்தபோது அவருக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றங்களை மேற்கொண்ட உளவுப் பிரிவின் முன்னாள் தலைவர்கள் நாம் ஜே ஜுன், லீ யங்-கீ, லீ யங் ஹோ மீதான ஊழல் வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் நாம் ஜே ஜுனுக்கு 3 ஆண்டுகள், லீ யங் கீ, லீ யங் ஹோவுக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் பார்க் குவென் ஹைக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x