Published : 24 Aug 2014 12:55 PM
Last Updated : 24 Aug 2014 12:55 PM
உலகையே அச்சுறுத்திக் கொண்டி ருக்கும் எபோலா வைரஸை கட்டுப்படுத்த ஓராண்டு காலம் தேவைப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன் அடிப்படையில் அந்த வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய மருத்துவக் கொள்கையை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தயாரித்து வருகிறது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜாரிக் கூறியதாவது:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 1300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அண்டை நாடுகள் தங்கள் எல்லைகளுக்கு சீல் வைத் துள்ளன.
எபோலா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து பயணிகள் யாரும் வரக்கூடாது என்று சில நாடுகள் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் எபோலா வைரஸை கட்டுப்படுத்த முடியாது. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. இதற்கு தீர்வு காண உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். எபோலா வைரஸுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தயாரித்து வரும் மருத்துவக் கொள்கை விரை வில் வெளியிடப்படும்.
அந்த மருத்துவக் கொள்கை 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை செயல் படுத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எபோலா வைரஸை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கு ஓராண்டு வரை காலஅவகாசம் தேவைப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையிலேயே 9 மாதங்கள் வரை செயல்படுத்தக்கூடிய மருத்துவக் கொள்கையை உலக சுகாதார அமைப்பு தயாரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT