Published : 15 Jun 2018 09:01 AM
Last Updated : 15 Jun 2018 09:01 AM
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த மார்ச் இறுதி முதல் பாலஸ்தீன மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 129 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அல்ஜீரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் நேற்று முன்தினம் கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியபோது, ‘‘காஸா வன்முறைக்கு ஹமாஸ் இயக்கமே காரணமாகும். எதற்கெடுத்தாலும் இஸ்ரேல் மீது பழிசுமத்துவது சிலருக்கு அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது’’ என்றார். இறுதியில் தீர்மானம் 120 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT