Published : 30 Jun 2018 11:45 AM
Last Updated : 30 Jun 2018 11:45 AM

சீனாவில் மோசமான சாலை விபத்து: 18 பேர் பலி

சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில்  பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சனிக்கிழமை சீனா போலீஸார் தரப்பில், "சீனாவின் ஹூனான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பயணிகளுடன் வந்த பேருந்து மீது  லாரி மோதியது. இதில் 18 பேர் பலியாகினர். இரு வாகனங்கள்  பெரும் சேதத்துக்குள்ளாகின. இதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

இரு வாகனங்களும் வேகமாக வந்ததன் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கடந்த சில மாதங்களில் நடந்த மோசமான விபத்ததாக இது கருதப்படுகிறது.

சீனாவில் ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துகளில் மட்டும் 260, 000 பேர் பலியாகின்றனர். இவற்றில் பெரும்பாலும் பேருந்து, ரயில் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x