Published : 12 Jun 2018 11:52 AM
Last Updated : 12 Jun 2018 11:52 AM
உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிம் - ட்ரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடந்து முடிந்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான வார்த்தை மோதல் நடந்தது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவ பலம் மற்று அணுஆயுத பலத்தை ஒப்பிட்டு வார்த்தை போரில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. அத்துடன் வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் கிம் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. இதற்கு தென்கொரியா முக்கிய காரணமாக இருந்தது.
இதையடுத்து சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று ( செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசினர். ட்ரம்ப் கிம் இடையேயான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கிம் ட்ரம்ப் சந்திப்பு உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
அவற்றில் சில..
Anand Natarajan
இனியாச்சு சண்ட போடாம ஒத்துமையா இருங்கய்யா
#Trumpkimsummit
Shiva Shankar
வரலாற்று சந்திப்பு.
Pirai Kannan
இத்தனை நாளாய் கிடைக்காத பேரை கடந்த ரெண்டு மணி நேரத்துல Obama வை Over take பண்ணி வாங்கிட்டான் Trump.
Leo Jude
டிரம்ப் - கிம் சந்திப்பு
இருவருமே சமாதானமாக கைகுலுக்கிக்கொண்டது வரலாற்று சிறப்பானது , இரு நாட்டு அதிகாரிகளும் கைகுலுக்க பேச்சுவார்த்தை துவக்கம்
சிங்கப்பூர் SP. பிரேம்குமார்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கைகுலுக்கல் செந்தோஷா தீவில் உள்ள ஒரு பிரசித்திபெற்ற ஓட்டலில் நடந்திருக்கிறது.
வேதாளம்
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர்...
கிறுக்கு புன்னகை
உலக மக்களை எப்படியெல்லாம் பதட்டத்திற்குள் வைத்துக்கொள்வது என்று இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை சிங்கப்பூரில் நடைபெற்றது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT