Published : 02 Jun 2018 11:59 AM
Last Updated : 02 Jun 2018 11:59 AM

அமானுஷ்ய புகைப்படம்? - அதிர்ச்சி அடைந்த தாய்

இங்கிலாந்தைச் சேர்ந்த லாரா வாட்சன் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அமானுஷ்ய புகைப்படத்தை பதிவிட்டுருக்கிறார்.

அந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரா தனது குழந்தைகளுடன் இங்கிலாந்துள்ள பிளேசிவுட்ஸ் பூங்காவுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள மரங்களில் அவரது குழந்தைகள் மற்றும் உறவுக்கார குழந்தைகள் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

தற்போது அந்த புகைப்படம்தான் பெரும் அதிர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அமானுஷ்ய பயத்தை. ஆம் லாராவின் 9 வயது மகன் பைரின் வாட்சனின் பின்னால் ஒரு சிறுவன் கை வைத்திருப்பது போன்ற காட்சி அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட லாரா கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் இதனை போட்டோஷாப் வேலை என்று கூறி வருகின்றனர். சிலரோ லாராவுக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் லாரா கூறும்போது, “எனக்கு போட்டோஷாப் தொழில் நுட்பம் எல்லாம் தெரியாது. அது ஒரு சாதாரண நாளாகத்தான் இருந்தது. நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். தற்போது அந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து நானும் எனது மகளும் கடந்த சில நாட்களாக உறங்கவில்லை.

எனது குழந்தைகள் குறித்த கவலையில் இருக்கிறேன். இது வழக்கத்துக்கு மாறான சம்பவம். எனக்கு பேய்கள் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. இப்போது நான் அதை பார்த்திருக்கிறேன். அந்த பூங்காவில் நாங்கள் இருக்கும்போது வேறுயாரும் அந்தப் பகுதியில் இருக்கவில்லை.

சிலர் என்னிடம்  அந்த பூங்காவிலுள்ள ஆற்றில் சிறுவன் ஒருவன் மூழ்கி இறந்திருக்கிறான். அந்தப் புகைப்படத்தில் இருப்பது அவனாகதான் இருக்கும் என்று கூறுகிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x