Published : 28 Jun 2018 03:20 PM
Last Updated : 28 Jun 2018 03:20 PM

கென்யாவில் பிரபல மார்க்கெட்டில் தீ விபத்து: 15 பேர் பலி; காயம் 70

கென்யாவில் மார்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஏபி வெளியிட்ட செய்தியில், "ஜிகோம்மா கென்யாவில் உள்ள பெரிய திறந்தவெளி சந்தைகளில் ஒன்று. இதில் புதன்கிழமை மதியம் 2. 30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 பேர் பலியாகினர். இதில் நான்கு பேர் குழந்தைகள் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை" என்று வெளியிட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட சந்தை கென்யாவிலுள்ள பிரபல சந்தையாகும். இங்கு ஆடைகள், காய்கறிகள், பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடமாக இருந்து வருகிறது.

கென்யாவில் சமீபத்தில் இன குழுக்களுக்கிடையே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எனவே இந்த தீ விபத்து இந்தத் தொடர் வன்முறை சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x