அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சு வார்த்தைகள் ரத்து செய்யப்படும்: சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சு வார்த்தைகள் ரத்து செய்யப்படும்: சீனா எச்சரிக்கை
Updated on
1 min read

அமெரிக்கா, தங்கள் நாட்டு பொருட்களுக்கு வர்த்தக வரியை அறிமுகப்படுத்தினால் அந்த நாடுடனான வர்த்தக பேச்சு வார்த்தைகளும் ரத்து செய்யப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல எனவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர்வரை 4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த வரி வதிப்பு நடைமுறைக்கு வர இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தங்கள்  நாட்டின் மீது அமெரிக்கா வர்த்தக வரியை அறிமுகப்படுத்த இருந்தால் அந்த நாட்டுடன் வர்த்தகம் தொடர்பான அனைத்து பேச்சு வார்த்தைகளும்  ரத்து செய்யப்படும் என்று சீனா கூறியுள்ளது.

இது தொடர்பாக பேச்சு வார்த்தையில் கடந்த சனிக்கிழமை  இரு நாடுகளும் ஈடுபட்டன.  இந்தப் பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக சீனா கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in