Published : 25 May 2018 08:11 AM
Last Updated : 25 May 2018 08:11 AM
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:
தலிபான், ஹக்கானி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது. மேலும், தங்கள் நாட்டில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை.
இருந்தபோதிலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சார்பில் நிகழாண்டிலும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது மிக சொற்ப அளவு நிதியே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது அடுத்த ஆண்டு மேலும் கணிசமாக குறைக்கப்படும். இவ் வாறு மைக் போம்பியா கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT