

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் பேங்க்கில் பள்ளி மாணவர்கள் 3 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
காஸா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2000-க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2,016 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 10,200-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும். மேலும் பலியான இவர்களில் 541 குழந்தைகள், 250 பெண்கள், 95 முதியவர்கள் அடங்குவர் என்றும் அந்நாட்டு ராணுவத் தரப்பில் கூறப்படுகின்றது.
அதே வேளையில், கடந்த ஜூன் 12- ஆம் தேதி, இஸ்ரேல் நாட்டின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ஹெப்ரான் நகரின் பள்ளியில் படித்து வந்த 3 மாணவர்கள் காணாமல் போனார்கள். மாயமான மாணவர்களை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் வெஸ்ட் பேங்க் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் கிளர்ச்சியாளகள் தான் இந்த படுகொலையை நிகழ்த்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.