Published : 07 May 2018 02:12 PM
Last Updated : 07 May 2018 02:12 PM

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவது  வரலாற்று தவறு என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, "அமெரிக்க அதிபர் என்ன திட்டம் வைத்திருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் ஈரானிடம் உள்ளது. அணு ஆயுதங்களை கொண்டு எங்கள் நாட்டை பாதுகாப்பது தொடர்பாக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் செய்துக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் போர் அபாயம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ்  கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபர் இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத  ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் போர் அபாயமா? ஐநா பொதுச்செயலர் கூறுவது என்ன?

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x