பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி: ஐஎம்எஃப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி: ஐஎம்எஃப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது பாகிஸ்தான். சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சமாளித்து வருகிறது.

சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதி உதவியை ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்நிலையில் கூடுதலாக, 6 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரையில் நிதி உதவி கேட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக ஐஎம்எஃப் மற்றும் பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in