Last Updated : 20 Apr, 2018 02:51 PM

 

Published : 20 Apr 2018 02:51 PM
Last Updated : 20 Apr 2018 02:51 PM

சிரியா எல்லையில் இராக் வான்வழித் தாக்குதல்

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியா எல்லையில் இராக் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து இராக் அரசு தரப்பில், “சிரியாவின் எல்லையோரத்தில் வியாழக்கிழமை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தினோம்” என்று கூறியுள்ளது.

தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது தகுத்த நடவடிக்கை எடுப்போம் என்று இராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இராக்கின் இந்தத் தாக்குதலை சிரிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டமாஸ்கஸ் பகுதிகளை மீட்க, சிரிய படைகள் புதன்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த நிலையில் இராக் ஐஎஸ்ஸை குறிவைத்து இராக் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x