Published : 29 Apr 2018 08:43 AM
Last Updated : 29 Apr 2018 08:43 AM
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இரு நாடுகளும் உரிமை கோரி வரும் சர்ச்சைக்குரிய நகரமான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்தது. ஆனால், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறவில்லை. எனினும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ‘ஹமாஸ்’ இயக்கத்தின் கடற்படை மீது இஸ்ரேல் போர் விமானம் நேற்று முன்தினம் இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், அந்த இயக்கத்துக்குச் சொந்தமான 6 போர்க்கப்பல்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலை பாலஸ்தீன ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT