Published : 14 Feb 2018 08:15 AM
Last Updated : 14 Feb 2018 08:15 AM

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரம் இல்லை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

இந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

அதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறும்போது, “வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x