Published : 15 Feb 2018 11:02 AM
Last Updated : 15 Feb 2018 11:02 AM
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ராஜினாமா செய்தார். நேற்றிரவு (புதன்கிழமை) தொலைக்காட்சியில் அவர் இதனை அறிவித்தார்.
இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இருந்த தென் ஆப்பிரிக்காவின் அதிகார சர்ச்சையும் அதனைச் சுற்றி மலிந்து கிடந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வந்துள்ளது.
ஜூமாவுக்குப் பதிலாக துணை அதிபர் சிரில் ராம்போஸார் அதிபர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. அவருக்கு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீது படிந்துள்ள கறையை அகற்றும் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது.
நாட்டின் துணை அதிபரும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருமான சிரில் ராமபோசா அதிபர் பதவி ஏற்கும் வகையில் ஜுமா பதவி விலக வேண்டும் என்று தொடந்து பல அழுத்தங்களை அவர் கடந்த சில தினங்களாக சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT