Published : 20 Aug 2014 03:35 PM
Last Updated : 20 Aug 2014 03:35 PM
பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கானை சந்தித்துப் பேச பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.
அரசுக்கு எதிரான போராட்டக்காரகள், பிரதமர் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு முன்னெடுத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அரசுக்கு எதிராக போராடிவரும் எதிர்க்கட்சி போராட்டக்காரர்கள், தடை உத்தரவை மீறி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக தற்போது முகாமிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகவில்லை என்றால் அவரது வீட்டிற்குள் நுழையப் போவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை சந்தித்து பேச பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.
நாட்டின் நலன் கருதி, இம்ரான் கானை சந்திக்கும் முடிவை நவாஸ் ஷெரிப் எடுத்துள்ளார் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் சாட் ரஃபிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பதை அவர், அதில் குறிப்பிடவில்லை.
தேர்தலில் முறைகேடு செய்து நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் தெக்ரீக்– இ– இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். நவாஸ் ஷெரீப் பதவி விலகி, மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடந்த வேண்டும் என்றும் கூறி அங்கு ஒரு வார காலமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்திற்கு மற்றொரு எதிர்க்கட்சியான அவாமி தெக்ரீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசியலில் நெருக்கடி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT