வன்முறையை நிறுத்துங்கள்: சிரியாவுக்கு சவுதி அரேபியா அழைப்பு

வன்முறையை நிறுத்துங்கள்: சிரியாவுக்கு சவுதி அரேபியா அழைப்பு
Updated on
1 min read

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துமாறு அந்நாட்டுக்கு சிரியா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும்போது, "சிரியாவின் கவுடா பகுதியில் நிகழும் வன்முறைகளை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்திகிறோம்.

தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் மருத்துவ உதவிகளை அளிக்க அனுமதிக்க வேண்டும். அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு அரசியல் ரீதியாக முடிவு எடுக்கப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்து சிரிய மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்” என்றார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை அரசு படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் அரசுப்படை விமானங்கள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் கடந்த சில தினங்களில் நடந்த தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் குழந்தைகள் 1,200 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in