Published : 01 Jan 2018 06:44 PM
Last Updated : 01 Jan 2018 06:44 PM

தென்கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கும்: கிம் ஜோங் உன் நம்பிக்கை

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கும் என்று நம்புகிறேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 9-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

இதுகுறித்து கிம் கூறும்போது, ''தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத் தொடரில் வடகொரியா பங்கேற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக எங்கள் நாட்டு பிரதிநிதிகளை தென்கொரியாவுக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம்.

தென்கொரியா, வடகொரியா அதிகாரிகள் இது தொடர்பாக எதிர்காலத்தில் சந்திக்கலாம்'' என்று கூறியுள்ளார்.

தொடர் அணிஆயுத சோதனைகள் காரணமாக தென்கொரியா - வடகொரியாவுக்கு இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவை எதிர்கொள்ள தென்கொரியா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

தொடர்ந்து தென்கொரியாவுடன் மோதல் போக்கு  நிலவி வந்த சூழ்நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிப்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கக் கூடும் என்று கிம் கூறி இருப்பது முக்கியவதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x