

இந்தோனேசியாவில் கட்டிடம் சரிந்து விழுந்தததில் 75 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இந்தோனேசிய போலீஸார் தரப்பில், ”இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் இன்று சரிந்து விழுந்தது. இதில் அக்கட்டிடத்தி பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 75 பேர் காயமடைந்தனர்,
இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பு ஏற்படவில்லை. பெரும்பாலனவர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்