Published : 14 Jan 2018 09:37 AM
Last Updated : 14 Jan 2018 09:37 AM
பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜான் பீலே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றிய ஜான் பீலே கடந்த 1990-ல் அந்த நாட்டின் வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். கடந்த 2015-ல் அவர் பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் கீழ் பணியாற்ற முடியாது என்று கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன்படி வரும் மார்ச் 9-ம் தேதி அவர் வெளியுறவுத் துறையில் இருந்து அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட உள்ளார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது.
ஜான் பீலே அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், அதிபர் ட்ரம்ப் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க தவறிவிட்டதால் பணியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு சோமாலியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய எலிசபெத் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகியது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT