Published : 24 Jan 2018 10:23 AM
Last Updated : 24 Jan 2018 10:23 AM
நவாஷ் ஷெரீபுக்கு எதிரான வழக்கில் கூடுதல் சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது சட்ட விரோதமாக லண்டனில் சொத்துக்கள் வாங்கியதாக தேசிய பொறுப்புடமை ஆணையம் வழக்குகளைப் பதிவு செய்தது. இஸ்லாமாபாத்தில் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ் வழக்கின் விசாரணைக்காக, நவாஸ் தனது மகள், மருமகனுடன் நேற்று 14-வது முறையாக ஆஜரானார். அப்போது மேலும் 2 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், நவாசுக்கு எதிராக மேலும் சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு தேசிய பொறுப்புடமை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT