

பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு இனிமையானதாக அமையட்டும்" என ட்வீட் செய்திருக்கிறார்.
அந்த ட்வீட்டுடன் அவர் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் தெரசா மே பேசியிருப்பதாவது:
வணக்கம்.
தைப் பொங்கல் விழா தொடங்குவதால் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழையன கழிந்து புதிய வாய்ப்புகளை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணம் இது. உழவுக்கு மட்டும் நன்றி செலுத்தும் நாள் அல்ல இது நமது உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் அண்டைவீட்டாருக்கும் நன்றி செலுத்தும் நாள் இது.
பிரிட்டன் வாழ் தமிழர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இது நல்லதொரு வாய்ப்பு. பிரிட்டன் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பு எதிர்பார்ப்பை விஞ்சியது. பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
இத்தேசம் அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை நல்கி அவரவர் லட்சியங்களை அடைய உதவும் தேசமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
பிரிட்டனை பன்முகத்தன்மை கொண்ட நாடாக ஆக்கியதில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அற்புதமானது.
எனவே, பொங்கல் பண்டிகை கொண்டாடும் பிரிட்டன் தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தெரசா மே வாழ்த்து சொல்லும் வீடியோ இணைப்பு