Last Updated : 31 Jan, 2018 01:45 PM

 

Published : 31 Jan 2018 01:45 PM
Last Updated : 31 Jan 2018 01:45 PM

டெல்லி, வடமாநிலங்களில் நிலநடுக்கம்

 

ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் ஏற்பட்ட பூகம்பம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட அறிவிப்பில், '' ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் 191 கி.மீ ஆழத்தில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணி(ஜிஎம்டி 7.07) அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அளவாகப் பதிவானது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூகம்பத்தின் அதிர்வு டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் வீடுகளில், கடைகளில், வர்த்தக நிறுவனங்களில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி சாலைக்கு வந்தனர். சேத விவரங்கள், பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் ஏதும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x