Last Updated : 24 Jan, 2018 02:18 PM

 

Published : 24 Jan 2018 02:18 PM
Last Updated : 24 Jan 2018 02:18 PM

தலிபான் தலைவர்களை பாகிஸ்தான் வெளியேற்ற வேண்டும்: அமெரிக்கா

தலிபான் தலைவர்களை பாகிஸ்தானிலிருந்து அந்நாடு வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்ட்ரஸ் கூறும்போது, "தலிபான் தலைவர்களை கைது செய்யவோ அல்லது நாட்டிலிருந்து வெளியேற்றவோ பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல் அந்த நாட்டுடனான எங்களது உறவை பலப்படுத்தியுள்ளது. இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைக்கு வாழ்த்துகள்” என்றார்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபடும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவத்துக்கான ரூ.1,621 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

முன்னதாக காபுல் நகரிலுள்ள புகழ்பெற்ற இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த தலிபான் தீவிரவாதிகள், நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 14 பேர் வெளிநாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x