Published : 18 Jan 2018 03:58 PM
Last Updated : 18 Jan 2018 03:58 PM

ரஷ்யாவில் உறை பனி: யாகுடியாவில் -67 டிகிரி செல்சியஸ்

ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள யாகுடியா பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

புதன்கிழமையன்று மட்டும் யாகுடியா பகுதியில் வெப்பநிலை மைனஸ் 67 டிகிரி செல்சிஸ் ஆக பதிவாகியுள்ளது.

ரஷ்யாவின் யாகுடியா பகுதி பொதுவாக பனிக்காலங்களில் அதிக அளவு பனிப்பொழிவை சந்திக்கும் பகுதியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வழக்கத்தைவிட கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள யாகுடியா பகுதியில், பள்ளி மாணவர்கள் தினமும் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

எனினும் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து அந்த மாகாணம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடும் பனிக்கு இப்பகுதியில் இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் யாகுடியா பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் அங்கு நிலவும் உறை பனியை செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x