Published : 17 Dec 2017 11:42 AM
Last Updated : 17 Dec 2017 11:42 AM

கனடா கோடீஸ்வர தம்பதி கொலை? போலீஸ் சந்தேகம்

கனடா கோடீஸ்வரர் பேரி ஷெர்மேனும் அவரது மனைவி ஹனியும் டொரன்டோவில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

கனடாவில் அபோடெக்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை பேரி ஷெர்மேன் (75) நடத்தி வந்தார். இவரது சொத்து மதிப்பு ரூ.20,500 கோடியாகும். கனடா நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ஷெர்மேனும் அவரது மனைவி ஹனியும் டொரன்டோவில் உள்ள வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். பேரி ஷெர்மேன் மறைவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x