Published : 27 Dec 2017 10:37 AM
Last Updated : 27 Dec 2017 10:37 AM

பெரு நாட்டில் கலவரம்

ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரி. இவர் 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் அரசை எதிர்த்து போராடிய 25 பேரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வயது முதுமை காரணமாக சிறையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெருவின் தற்போதைய அதிபர் பெட்ரோ பாப்லோ முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு பொதுமன்னிப்பு வழங்கி யுள்ளார்.

இதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் லிமா உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்து பெரும் கலவரமாக மாறியுள்ளது.

இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x