ஆப்கான். போலீஸ் தலைமையகத்தில் தாலிபன்கள் தற்கொலைப்படைத் தாக்குதல்: 6 பேர் பலி

ஆப்கான். போலீஸ் தலைமையகத்தில் தாலிபன்கள் தற்கொலைப்படைத் தாக்குதல்: 6 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஆறு போலீஸார் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ’ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தாலிபன் தீவிரவாதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு போலீஸார் கொல்லப்பட்டனர். 4  பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

 ஆப்கானிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் நடத்திய தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 43 பேர் பலியாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in