Last Updated : 19 Dec, 2017 06:03 PM

 

Published : 19 Dec 2017 06:03 PM
Last Updated : 19 Dec 2017 06:03 PM

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 3 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ளூர் ரயில் திடீரென தடம் புரண்டு பாலத்தில் விபத்துக்குள்ளானது. இதில் ரயில் பாலத்துக்குக் கீழே சென்ற வாகனங்கள் மீது விழுந்ததில் 3 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த ரயில் விபத்தில் 2 பேர் பலியாகினர். 41 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x