Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM
பாகிஸ்தானில் வியாழக்கிழமை சாலையோரத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலியாயினர். ஹாங்கு மாவட்டத்தில் உள்ள தோரி பண்டா எனும் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குண்டு வெடித்த பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலிபான் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT