Published : 31 Oct 2017 12:14 PM
Last Updated : 31 Oct 2017 12:14 PM
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரான் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தும் என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்றத்தில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி பேசும்போது, "ஈரானிய விஞ்ஞானிகள் அதிநவீன ஏவுகணை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து ஏவுகணை ஆராய்ச்சியை நிறுத்த முடியாது" என்றார்.
கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனைகளை ஈரான் நடத்தி வந்தது. இதனையடுத்து ஈரானின் அணுஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.
மேலும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் ட்ரம்ப் விதித்தார்.
முன்னதாக ஏவுகணை சோதனை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் நிலவி வரும் நிலையில் ஈரானும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT