Published : 03 Feb 2015 10:39 AM
Last Updated : 03 Feb 2015 10:39 AM
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ரூ.73.66 கோடி செலவில் 56 பாலங்களை கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில், திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் 56 பாலங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்காக, மாநில உட்கட்டமைப்பு திட்ட நிதியில் இருந்து ரூ.73.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட 9 மாவட்டங்களில் உள்ள 203 சாலைகளை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.66.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT