Published : 11 Oct 2014 11:00 AM
Last Updated : 11 Oct 2014 11:00 AM

தமிழக மீனவர்கள் 20 பேருக்கு காவல் நீட்டிப்பு

புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 7 பேர், ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 பேர் என தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை 2-வது முறையாக நீட்டித்து, வருகிற 24-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x