Published : 15 Jul 2014 05:12 PM
Last Updated : 15 Jul 2014 05:12 PM

கொலம்பியாவில் நுழைகிறது ஹீரோ மோட்டோகார்ப்

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொலம்பியாவில் தனது விற்பனையைத் தொடங்க உள்ளது.

இதற்காக கொலம்பியாவில் இந்நிறுவனம் எஸ்ஏஎஸ் என்ற பெயரில் துணை நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் உள்ள வில்லா ரிகா எனுமிடத்தில் உள்ள தாராள வர்த்தக மண்டலத்தில் அதிநவீன தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.

இந்த ஆலை 2015-ல் உற்பத்தியைத் தொடங்கும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் முன்ஜால் தெரிவித்தார். முதலில் ஆண்டுக்கு 78 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

பின்னர் இதன் திறன் 1.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். இந்த ஆலைக்காக 7 கோடி டாலர் முதலீடு செய்கிறது. 2020-ம் ஆண்டுக்குள் 50 நாடுகளில் தடம் பதிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு செயல்படுகிறது. வங்கதேசத்திலும் இந்நிறுவனம் ஆலையை அமைக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x