அக்.17: இன்று என்ன? - சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்

அக்.17: இன்று என்ன? - சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்
Updated on
1 min read

உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை இல்லாதவர்களே வறுமையில் இருப்பவர்கள். இந்நிலையில், வறுமை ஒழிப்பு, வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை, அக். 17 உலக வறுமை ஒழிப்பு நாள் என்று 1992-ல் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, ஆதரவற்ற நிலையில் வறுமையில் யாரும் தத்தளிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக். 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

2022-ம் ஆண்டின் கருப்பொருள் “கண்ணியமுடன் வாழும் உரிமையை நடைமுறைப்படுத்துதல்” ஆகும். ஆப்பிரிக்க நாடான புருண்டியில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வறுமையில் உழல்கின்றனர். இதனால் உலகின் மிகுந்த ஏழ்மையான நாடாக புருண்டி அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in