Published : 15 Sep 2022 06:01 AM
Last Updated : 15 Sep 2022 06:01 AM

செப்.15: இன்று என்ன? - அண்ணா பிறந்த தினம்

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தவர். தென்னாட்டு பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அண்ணாவின் 113-வது பிறந்த நாள் இன்று.

1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். திரைப்படங்கள் வாயிலாக மக்கள் மனதில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார். அடுக்குமொழி வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தார். தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் இணைந்தார்.

1949-ம் ஆண்டு திமுக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1967-ல் தமிழக முதல்வரானார். சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். மாநில சுயாட்சிக்காகவும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x