செப்.13: இன்று என்ன? - வங்க எழுத்தாளர் சையது முஜ்தபா அலி பிறந்த தினம்

செப்.13: இன்று என்ன? - வங்க எழுத்தாளர் சையது முஜ்தபா அலி பிறந்த தினம்
Updated on
1 min read

வங்காள எழுத்தாளரும் பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 13). வங்காள மாகாணத்தின் சில்ஹட் மாவட்டம் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாம்) 1904-ல் பிறந்தார்.

சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 1926-ல் பட்டப் படிப்பை முடித்தார். தாகூரை தன் குருவாக ஏற்றார். ‘ஸிட்டு’ என்று செல்லப் பெயரிட்டு அழைத்த தாகூரும் இவரைத் தன் சீடராகக் கருதினார். சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார்.

இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. நரசிங்கதாஸ் விருது, ஆனந்த புரஸ்கார் உட்பட பல விருதுகளைப் பெற்றார். 1974-ம் ஆண்டு 70-வது வயதில் காலமானார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in