Published : 16 Aug 2022 06:00 AM
Last Updated : 16 Aug 2022 06:00 AM

ஆக.16: இன்று என்ன? - பாரதியாரை வென்ற கவி!

தமிழ் முன்னோடி எழுத்தாளர் அ.மாதவையா 1872 ஆகஸ்டு 16-ம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார். 1914-ம் ஆண்டில் மகாகவி பாரதியாரும் பங்கேற்ற “இந்திய கும்மி” என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றார் மாதவையா.

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே” பாடலுக்காக பாரதிக்கு அன்று 2-ம் பரிசு கிடைத்தது. நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை நடத்தி வந்தார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x