Published : 03 Aug 2022 06:00 AM
Last Updated : 03 Aug 2022 06:00 AM

ஆக. 3: இன்று என்ன? - உலக தர்பூசணி நாள்

ஆகஸ்டு 3-ம் தேதி உலக தர்பூசணி நாளாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் அதிகமான மக்களால் விரும்பப்படும் பழங்களின் பட்டியலில் முதலிடம் தர்பூசணிக்குத்தான்.

தென்னாப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது இப்பழம். சீனாவில்தான் அதிக தர்பூசணிகள் பயிரிடப்படுகிறது. 1200-க்கும்அதிகமான தர்பூசணிவகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது கோடைக்காலத்தில் குளுமைக்காகவும் சுவைக்காகவும் சாப்பிடப்பட்டாலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் மற்றும் 92% நார்ச்சத்தும் உள்ளன.

அதிலும் இதன் சிவப்பு நிற சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட, அதிகளவு சத்து அதன் வெள்ளை நிற அடிப்பகுதியில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சக்தி தர்ப்பூசணிக்கு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x