Published : 22 Jul 2022 06:00 AM
Last Updated : 22 Jul 2022 06:00 AM

ஜூலை 22: இன்று என்ன? - தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள்

ஒரு நாட்டுக்கு அடையாளமாக திகழ்வது அந்நாட்டின் தேசியக் கொடிதான். இந்திய தேசியக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட கொடியாகும்.

ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக இருந்து வருகிறது. இது மூவர்ணத்தை கொண்டது.

தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தார். மூவர்ண தேசியக் கொடிக்கு 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்திய அரசின் அப்போதைய ஆங்கிலேயே நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியது. அந்தக் கொடியே 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x